• தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்கிறார்.
  • பாஜக உடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, கூட்டணி என்பது தேர்தல் நேரத்து வெற்றிக்காக மட்டுமே என்றும் விளக்கம்.
  • தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல். உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.11,425-க்கும் விற்பனை.
  • இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, இன்று முதல் அப்பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.
  • நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம். திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட  10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தகவல்.
  • கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 6,517 கனஅடியாக அதிகரித்ததால், 4,249 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால், தென்பெண்னை ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு.
  • மதுரையிலிருந்து சென்னைக்கு 76 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், சாதுர்யமாக செயல்பட்ட விமானி பத்திரமாக விமானத்தை தரையிறங்கினார்.
  • திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹாரத்தை ஒட்டி, வரும் 27-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது எனவும் ஆட்சியர் விளக்கம்.
  • பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில், 2 மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகளை கொன்ற தந்தை போலீசில் சரண். மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த ஆத்திரத்தில் வெறிச்செயல்.