50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “ அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான பணியாளர்களைச் சந்தித்தேன்.


இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறியிருக்கிறது; மீதமுள்ள 40 விழுக்காடு பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.






Also Read: TN Govt: அடடா..! ரூ.4000 உதவித்தொகை - அறிவித்தது தமிழக அரசு - யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?