தமிழ்நாடு பா,ஜ.க. வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிய  நிர்மல்குமாருக்கு மாநில தலைவர்  அண்ணாமலை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 


பா.ஜ. கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக தமிழக பா.ஜ.க. ஐ.டி.பிரிவு தலைவர் பொறுப்பை வகித்த நிர்மல்குமார் அறிவித்துள்ளார். மேலும், தமிழக பா.ஜ.க. தலைமை மீது சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இந்த சூழலில், அண்ணாமலை “ அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்.” என்று ட்விட்டரில் தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். நிர்மல்குமார் பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க. -வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நிர்மல் குமார் பதவி விலகல் 


பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக நிர்மல் குமார் அறிக்கையின் மூலம் அறிவித்தார். , "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும இல்லாமல் உண்மையாக, நேரமையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு உழைத்தும் தனக்கான அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


தலைமை சரியில்லை:


என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்று அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பியிருக்கும் தொண்டர்கள் கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப  ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.


கட்சி தலைமையை சாடல் :


தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரை போல செயல்படும் நபரால் சுட்சி அறிவை நோக்கி செல்வதை ஒவ்வோரு நாளும் பார்க்க முடிகிறது. 2019யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20 சதவீதம் கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலாத்தில் சுற்றி வரும் ஒருநபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது. அதை உணர்த்த என்னை போன்று பலர் தோல்வியுற்றோம் எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரரை வீர ஆவேசமாக பேசிவிட்டு திரைமறையில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நபருடன் எப்படி பயணிமுடியும்?” என்று குறிப்பிட்டிருந்தார்.











மேலும் வாசிக்க..


"420 மலையாக இருக்கும் நபரால் தமிழ்நாட்டிற்கே கேடு.." தமிழக பா.ஜ.க. தலைமை மீது நிர்மல்குமார் சரமாரி குற்றச்சாட்டு..!


Annamalai: “24 மணிநேரம் கெடு; முடிந்தால் என் மீது கை வையுங்கள்” - தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை சவால்...!