கடந்த சில தினங்களாக திடீரென, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 




ஆகையால் காலை 10 மணிக்குள்ளாக 10 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதால் மக்கள் தங்கள் வேலைகளை திட்டமிட்டு கொள்ளவும்.