அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதாமன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Continues below advertisement

சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் பரவலாக மழை :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வடகால், எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.  

வடகிழக்கு பருவமழை:

நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் நவம்பர் 17 முதல் 23 வரை வடகிழக்கு பருவமழை வெகு குறைவாக இயல்பை விட பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர். ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது.

இயல்பை விட குறைவு:

16 மாவட்டத்தில் மழை பெய்யவில்லை, 22 மாவட்டத்தில் இயல்பை விட குறைவான அளவு மழை பதிவாகியுள்ளது. அக்டோபர் 1 முதல் நவம்பர் 23 வரையிலும் தமிழகம் புதுவை காரைக்கால் ஆக்கிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையிலும் பதிவான மழை அளவு 330 மீ. மீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 317 மில்லி மீட்டர் இயல்பை விட 4% அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களின் நிலையை பொறுத்த வரையிலும், குறிப்பாக கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இயல்பை விட 17 சதவீதம் பதிவாகியிருந்த நிலையில் கடந்த வாரம் அது நான்கு சதவீதமாக குறைந்துள்ளது. வெப்பநிலை பொறுத்த வரையிலும் அதிகபட்ச வெப்பநிலையும் குறைந்தபட்ச வெப்பநிலையும் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இயல்பை ஒட்டி இருந்தது.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.