தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 28 மாவட்டங்களில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.