தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் அரசின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.


தமிழநாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, தொற்று பரவலை முதலில் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இருப்பினும், கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்புகளும், அதிகரிப்புகளும் அதிகரித்தன.  குறிப்பாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தன. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மருத்துவ குழு நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிபுணர் குழு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கடந்த சிலவாரங்களாக தளர்வுகள் அற்ற ஊரடங்கை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார். இது, நல்ல பலனை கொடுத்தது. இதனால், 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தொற்று குறையத் தொடங்கின. இதன்காரணமாக கடந்த 7ஆம் தேதியில் இருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் ஊரடங்கு தளர்வுகளை கொடுக்கப்பட்டது என்று எதற்கு என்று தெரியாமல். கொரோனாவின் பயம் இல்லாமல் பழைய வெளியே சுற்றி வருகின்றனர்.




இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் வழங்கலாமா? என்பது குறித்து தலைமை செயலகத்தில் இன்று காலை 11  மணிக்கு தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ள ஊரடங்கு எந்த அளவிற்கு பயனளித்திருக்கிறது என்பது குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட உள்ளது. 


காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்


தமிழ்நாட்டில் நேற்று 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் 1,345 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 405 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 28,170 ஆக அதிகரித்துள்ளது. 31,253 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 2,04,258 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 22,92,025 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Sundar Pichai Birthday: பெர்த்டே பாய் சுந்தர் பிச்சையின் இன்னொரு உலகம் இது!