ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை, கொரோனா பரவல் கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நடப்பாண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்த்தாயுடன் தொடங்கியது.


கூட்டம் தொடங்கியவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை படிக்கத் தொடங்கினார். 




தன்னுடைய உரையை தொடங்கிய ஆளுநர் தமிழக அரசை பாராட்டியும், நலத்திட்டங்களை பட்டிலிட்டும் பேசினார். அதில், '' கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளக்குகிறது.  கொரோனா இரண்டாவது அலையை சிறப்பாக கட்டுப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்.  இயற்கையுடன் இணைந்து வாழும் தமிழகர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 'எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் திட்டம்' மூலம் தமிழை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்


மேகதாதுவில் கர்நாடகா அணை  கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்பதே இந்த அரசின் நிலைப்பாடு. ’இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையையே தமிழ்நாடு அரசு பின்பற்றும். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடர்வதில் அரசு உறுதியுடன் உள்ளது. தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் விதமாக அனைத்து சாதியினரையும் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்கள் ஆக்கியுள்ளது என குறிப்பிட்டார். 


கூட்டம் தொடங்கியவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை படிக்கத் தொடங்கினார். அப்போது, மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்காக தி.மு.க. தலைமையிலான அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதை கண்டித்து அ.தி.மு.க., வி.சி.க. எம்.எல்.ஏ.க்கள் தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி, நாகை  எம்.எல்.ஏ. ஆளுர் ஷாநவாஸ், செய்யூர் எம்.எல்.ஏ. பனையூர் பாபு ஆகியோர் நீட் விவகாரத்தில் ஆளுநர் முறையாக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.


வி.சி.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த சிறிது நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறைவு செய்தது, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு உள்ளிட்ட தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண