தமிழ்நாடு முழுவதும் 25ஆம் தேதி (செவ்வாய்கிழமை) பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் தீபாவளிக்கு மறுநாள் வரையறுக்கப்பட்ட விடுமுறை ( Restricted Holiday) தினத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்பதால் அரசு ஊழியர்களுக்கு என்று தனியாக விடுமுறை விடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.