தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 621 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்து 99 ஆயிரத்து 485 ஆகும். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்து 98 ஆயிரத்து 945 நபர்கள் ஆவார்கள்.




சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 579. இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 17 ஆயிரத்து 532 ஆகும். பெண்கள் 13 ஆயிரத்து 089 ஆகும். இன்று மட்டும் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 287 ஆகும். இன்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் தமிழகம் முழுவதும் 297 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 109 பேர் தனியார் மருத்துவமனையிலும், 188 நபர்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள்.தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்து 546 நபர்கள் உயிரிழந்துள்ளனர். எந்த பாதிப்பும் இல்லாமல் 68 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.