’முழு ஊரடங்கை மிகக் கடுமையாக்க முடிவு!’ - முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை

கொரோனா தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க இன்று தலைமைச்செயலகத்தில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது

Continues below advertisement

கொரோனா தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க இன்று தலைமைச்செயலகத்தில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது. கூட்டத்தின் முடிவில் கொரோனா பரவல் கட்டுப்பாடு தொடர்பாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் முழு ஊரடங்கை மிகவும் கடுமையாக்குவது என அனைத்துக் கட்சியினரின் ஆலோசனையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மக்கள் நல்வாழ்வு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் டி.ஆர்.பாலு,ஆர்.எஸ்.பாரதி; அதிமுக சார்பில் வெ.பரமசிவம்; காங்கிரஸ் தரப்பிலிருந்து விஜயதாரணி, முனிரத்னம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நைனார் நாகேந்திரன்,எம்.என்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

Continues below advertisement


  • கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. 

  • நோய்த் தொற்று வேகமாகப் பரவிவரும் இக்காலக் கட்டத்தில், அனைத்துக் கட்சியினரும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாகத்.தவிர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  • நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால், கள அளவில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைபிடித்திடுமாறு மக்களை அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

  • நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆலோசனைகளை வழங்க, சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர்ஆலோசனைக் குழு அமைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

  • அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இரண்டு வார ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola