2022ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. ஒமிக்ரான், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்றுடன் முடிவடையும் சட்டசபை கூட்டத்தொடரில், இன்று கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதவை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில் தாக்கல் செய்தார். ஆனால், கூட்டுறவு நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்துள்ள இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.