விழுப்புரம்: தமிழகத்தில் திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கூறினார்கள். ஆனால் கள்ளச்சாராயம் தான் ஓடுவதாகவும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் திமுக அரசு செய்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.


எக்கியார்குப்பத்தில் விஷசாராயம் அருந்து முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  மரக்காணம் எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சிலருக்கு கண் பார்வை, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவரக்ள் தெரிவிப்பதாகவும், சித்தாமூரில் போலி மதுபானம் அருந்தி 5 பேர் இறந்துள்ளனர் இது துயரமான சம்பவம் என்றும் விடியா ஸ்டாலின் அரசில் இரண்டு ஆண்டுகளாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை கள்ளச்சாராய விற்பனையில் திமுகவினரே செயல்படுகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 14 பேரின் விலைமதிக்க முடியாத உயிரை இழந்துள்ளதாக குற்றச்சாட்டினார்.


போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி விற்பனை செய்வதாகவும் அதிமுக ஆட்சியில் போலிமது விற்பனையை தடுக்க குழு அமைக்கபட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அது இல்லை என்றும் இரண்டே நாளில் 1600 பேர் கைது செய்யப்படுகிறார்கள். மது விற்பனை அரசுக்கு தெரிந்து இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதன் மூலம் தெளிவாகுவதாக கூறினார்.  உயிரிழப்பிற்கு முழு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா கள்ளச்சாராயம் விற்பனை செய்யபடுவதற்கு ஆளும் கட்சி துணை போவதாக இதனை தடுக்க கூறியிருந்தோம் அதனை செய்யவில்லை என தெரிவித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கூறினார்கள்.  ஆனால் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது. 


கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதாகவும் இதற்கு துறை அமைச்சரை நீக்க வேண்டும் என்றும் அரசாங்கமே மது பானம் அருந்த ஆதரவு கொடுப்பதாகவும் திருமணம் விளையாட்டு மைதானத்தில் மது பானம் குடிக்கலாம் என அரசாங்கம் கூறுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் மது விற்பனையில் செந்தில்பாலாஜி பத்து சதவிகிதம் லஞ்சம் பெறுவதாகவும் சாராய உயிரிழப்பு குறித்து சமூக போராளிகள் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை அரசின் கைகூலியாக அவர்கள் செயல்படுவதாகவும், திமுகவின் கூட்டணியில் உள்ளவர்கள் இச்சம்பவம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண