weather report: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 

தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் இன்று, கன மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,அரியலூர், பெரம்பலூர்,தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண