வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.  சென்னையைச் சேர்ந்த சந்தீப்குமார், சிவகங்ககையைச் சேர்ந்த முத்துக்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். மேலும், ஏற்கனவே உள்ள வழக்குடன் சேர்ந்து சந்தீப் மற்றும் முத்துக்குமார் தொடர்ந்த வழக்கும் சேர்ந்து விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.