Just In





TN fishermen arrest: போராட்டம் எல்லாம் வீணா? மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை கடற்படை அட்டூழியம்
TN fishermen arrest: ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

TN fishermen arrest: தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
14 தமிழக மீனவர்கள் கைது:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதிய சேர்ந்த மீனவர்கள், வடக்கு மன்னார் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தொடர் கைது நடவடிக்கைகள், ராமேஸ்வரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கையால் வாழ்வாதாரம் மட்டுமின்றி, சிறைகளில் அடைக்கப்பட்டு வாழ்க்கையையே தொலைப்பதாக மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
போராட்டங்கள் வீணா?
ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதும், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியபடி தான் உள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிகக்ள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண எந்த உரிய நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை. அதன் விளைவாக தான், தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடரும் மீனவர்கள் கைது:
- கடந்த மாதம் 12ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்
- கடந்த 26ம் தேதியன்று தமிழக மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
- கடந்த மாதம் 28ம் தேதி காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்
- கடந்த 30ம் தேதி கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, விசைப்படகுடன் இலங்கை கடற்படை செய்தது
- கடந்த 3ம் தேதி தெற்கு மன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை, படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது.