TN Fishermen: தமிழக மீனவர்கள் மேலும் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள, சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


13 மீனவர்கள் கைது:


கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, விசைப்படகுடன் இலங்கை கடற்படை செய்துள்ளது. அப்போது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் யாழ்பானத்தில் மீனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளனர்.  இதனிடையே, காயமடைந்தவர்களுக்கு காங்கேசன் துறைமுகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் அடுத்தடுத்து 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், இன்று மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த தொடர் நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.