நியூமராலஜிக்காகவும் மற்றும் பிற காரணங்களுக்காகவும் பேன்சி நம்பர்களை தேடி வைப்பது பிரபலங்களிடேயே பழக்கமாக இருக்கிறது. பொதுவாக, சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பிற விவிஐபிக்கள், தங்களின் வாகனங்களுக்கு பேன்சியான நம்பர்களை வைப்பார்கள். 


விரைவில், தங்களின் வாகனங்களுக்கு பேன்சி நம்பர்களை வைக்கும் விவிஐபிக்கள் வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதுகுறித்து அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.


அக்டோபர் 7 தேதியிட்ட வீட்டுப் போக்குவரத்துத் துறையின் வரைவு அறிவிப்பில், அரசால் ஒதுக்கப்பட்ட 96 சிறப்பு பதிவு எண்களைப் பெறுவதற்கான கட்டணம் 100% உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 0001 மற்றும் 9999க்கு இடைப்பட்ட எண்களை பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


 






இந்த நடவடிக்கை அடுத்த சில ஆண்டுகளில் மாநிலத்திற்கான வருவாயை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டில் போக்குவரத்துத் துறையின் வருவாய் ரூ.5,626.8 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒன்றுக்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் ஒரே எண்ணுக்கு விண்ணப்பித்தால், அதிக சாலை வரி செலுத்தியவருக்கு அதிர்ஷ்ட எண் ஒதுக்கப்படும். 


ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு பேன்சி எண்களை வாங்குவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 


மாநிலத்தால் ஒதுக்கப்பட்ட சிறப்பு எண்களுக்கான கட்டணங்கள், நடப்பு தொடரையும் சேர்த்து முதல் நான்கு தொடர்களுக்கு ரூ.40,000 லிருந்து 80,000 ஆக அதிகரித்தது. இங்கு, தொடர் என்பது நான்கு இலக்க பதிவு எண்ணுக்கு முன் வரும் எழுத்துக்களைக் குறிக்கிறது.


5 முதல் 8 வரையிலான தொடர்களுக்கான கட்டணம் ரூ.60,000லிருந்து ரூ.1.2 லட்சமாகவும், தொடர் 9 முதல் 10 வரை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. 11 முதல் 12 வரையிலான தொடர்களை ஒதுக்குவதற்கு, தற்போது ரூ.2 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, ரூ.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது.


ஆர்டிஓக்களில் 96 சிறப்பு எண்களைத் தவிர மற்ற ஃபேன்சி எண்களை வாங்குவதற்கு, வாகன ஓட்டிகள் ஆர்டிஓவில் பதிவு செய்யப்பட்ட எண்ணைச் சரிபார்த்து, அடுத்த 1000 எண்களில் இருந்து எண்களைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், அதற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.


வாகனத்தின் விலையைப் பொறுத்து புல கட்டண அடுக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.