நாட்டில் கொரோனா முதல் அலை பரவலின்போது, சிகிச்சைக்கு சித்த மருத்துவம் பெரிதும் உதவியது. அப்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்க கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீரை குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அரசாங்கமும் வீடு வீடாக சென்று இதனை மக்களுக்கு கொடுத்து வந்தனர்.


தற்போது, நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், இவைகளை எல்லாம் மக்கள் மறந்துவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றியுள்ளது. தற்போது, அவர்களுக்கு அதை ABP நாடு நினைவூட்டுகிறது.


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீரை தயாரிக்கும் முறையினை வெளியிட்டுள்ளது.




 


கபசுரக் குடிநீர்:


சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதோடை, கோஷ்டம், சிறுதேக்கு உள்ளிட்ட 15 வகை அரிய மூலிகைகளைக் கொண்டு சித்த மருத்துவ முறைப்படி கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது.


 


                                 கபசுரக் குடிநீர் தயாரிக்கும் முறை


5 கிராம் கபசுரக் குடிநீர் சூரணத்தை 240 மிலி தண்ணீரில் நன்கு காய்ச்சி 60 மில்லியாக சுருக்கி வடிகட்டிய குடிநீரை, தயாரித்த 3 மணி நேரத்திற்குள்ளாக காலை உணவுக்கு பின் அருந்தவும்.


உட்கொள்ளும் முறை: பெரியவர்கள் 60 மி.லி/சிறியவர்கள் 30 மி.லி




 


நிலவேம்புக் குடிநீர்:


நிலவேம்புச் சமூலம், வெட்டிவேர், சுக்கு, கோரைக்கிழங்கு, மிளகு சந்தனத்தூள் உள்ளிட்ட 9 வகை அரிய மூலிகைகளைக் கொண்டு சித்த மருத்துவ முறைப்படி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது.


                                 நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும் முறை


5 கிராம் நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை 240 மிலி தண்ணீரில் நன்கு காய்ச்சி 60 மில்லியாக கருக்கி வடிகட்டிய குடிநீரை, தயாரித்த 3 மணி நேரத்திற்குள்ளாக காலை உணவுக்கு பின் அருந்தவும்.


உட்கொள்ளும் முறை: பெரியவர்கள் 60 மிலி/ சிறியவர்கள் 30 மிலி