Seeman: 'திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?' பேட்டியால் கெட்ட சீமான்

பொதுவாக பேட்டிகளில் கொந்தளிப்பாக பேசும் சீமான், சமீபத்திய தனது பேட்டியால், பெண்களை கொந்தளிக்க வைத்துள்ளார். அவர் அப்படி என்ன பேசினார் தெரியுமா.?

Continues below advertisement

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்திய பேட்டி ஒன்றில், பெண்களை துச்சமாக மதித்து பேசியது, பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான பாலியல் வழக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு அவர் அளித்த பதில், அனைவரையும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Continues below advertisement

பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத சீமான்

2011-ம் ஆண்டு, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், சீமான் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஒரு வருடம் கழித்து அந்த வழக்கை வாபஸ் பெற்றார் விஜயலட்சுமி. ஆனாலும், நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளாமல், சீமானிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த பாலியல் வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஆஜராகாததால், நேற்ற அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டு சர்ச்சையானது. இது குறித்து சீமானின் மனைவி பேட்டியளித்த நிலையில், படிப்பதற்காகத் தான் கிழித்தேன் என அவர் கூறிய காரணமும் தற்போது கேலிக்கூத்தாகியுள்ளது.

பேட்டியில் பெண்களை துச்சமாக மதித்து பேசிய சீமான்

இந்த நிலையில், தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், பாலியல் வழக்கு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, சிரித்து, நக்கலடித்துக்கொண்டே பேசிய சீமான், ”நான் ஏதோ வயதுக்கு வந்த பெண்ணை குச்சிகட்டிலிருந்து தூக்கிக்கொண்டுபோய் சோளக்காட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுபோல் கதறுகிறீர்களே” என்று பேசி அதிர்ச்சியளித்தார்.

அதேபோல், ”நான் ஏதோ காலேஜில் படிக்கும் பெண்ணை, அவர் சம்மதமில்லாமல் கடத்திக் கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதுபோல் பேசுகிறீர்களே என்று மீண்டும் கேள்வி எழுப்பினார். அது மட்டுமல்லாமல், விஜயலட்சுமி பெண் என்பதால் அவரை பெங்களூருவிற்கு தேடிச் சென்று விசாரித்ததாகவும், தன்னை மட்டும் விசாரணைக்கு வரச் சொல்வதாகவும் வேறு அர்த்தம் வரும் வகையில் பேசினார்.

அதோடு, என்னால் 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதாக கூறியுள்ளார், அப்படி பார்த்தால், ஓராண்டுக்குள் அதிக கருக்கலைப்பு செய்தவன் நானாகத்தான் இருப்பேன் என சிரித்துக்கொண்டே நக்கலடித்தார்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், அவர் பேட்டி அளிக்கும்போது, அவர் அருகில் மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணியும் அமர்ந்திருந்தார். அதோடு, அவர் பின்னாலும் நாம் தமிழர் கட்சியின் பல பெண் நிர்வாகிகள், தொண்டர்கள் நின்றிருந்தனர்.

சீமானை கிழித்தெடுக்கும் பெண்கள்

அவரது இந்த பேச்சுக்களிலிருந்து, பெண்களை பற்றி அவரது மனதில் என்ன நினைத்திருக்கிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நடிகை விஜயலட்சுமிக்கு அவர் செய்தது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்பது போல பேசும் அவர், இளம் பெண்களை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வது அவ்வளவு சாதாரணம் என்கிறாரா? அப்படி அவர் செய்தால், அதைத்தான் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்கிறாரா என பெண்கள் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

என்ன வயதானாலும், பெண் என்பவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். இளம் பெண்களுக்கு நடந்தால் மட்டுமே அது கொடுமை என்பதுபோல் பேசும் சீமான், பெண்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பு இவ்வளவு தானா என்ற கேள்விகள் எழுகின்றன. அதிலும், பெண்களை அருகில் வைத்துக்கொண்டே இவ்வாறு சீமான் பேசியதற்கு கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola