“மற்ற 8 பேரும் என்னை கொல்ல முயற்சிக்கின்றனர்” - நீதிபதிக்கு சாத்தான்குளம் கொலைக் குற்றவாளி கடிதம்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருக்கும் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

Continues below advertisement

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் சிறையில் இருக்கும் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிறையில் தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக கூறியுள்ளார்.

Continues below advertisement

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருக்கும் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸை ஏ2 முதல் ஏ9 வரை குற்றம்சாட்டப்பட்டவர்களே அடித்துக் கொன்றனர். கைதான என்னை தவிர்த்து மற்ற 8 பேருமே இந்த கொலையை செய்தார்கள்.நான் செய்யவில்லை. அந்த 8 பேரும் என்னை கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த மார்ச் 26ஆம் தேதி சிறையில் காலை 6.30 மணியளவில் தன்னை தாக்க வந்தார்கள் என்றும், மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும்போதும், வரும்போதும் பிற குற்றவாளிகள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தக் கடிதத்தில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியிருப்பதால், இதுதொடர்பாக விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola