திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவர் எ.வ.வேலு. இவர், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று காலை முதல் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனமும் தெரிவித்தார்.




இந்நிலையில், எ.வ.வேலுவின் வீடு, அறக்கட்டளை உள்ளிட்ட 16 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.