அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு.


அமராவதி அணையில் இருந்து, தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணை வறண்ட நிலையில் உள்ளது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 133 கனஅடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 260 கனஅடியில், 220 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து நின்றதால், வறண்ட நிலையில் தடுப்பணை உள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் 64.11 அடியாக இருந்தது.


 




 


மாயனூர் கதவணை


கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு, 8,984 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில்  டெல்டா பாசன பகுதியில், குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.


 




 


 


ஆத்துப்பாளையம் அணை


கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணுகி நீர்மட்டம், 11.54 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


 


 




 


மழை நிலவரம்


கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பாலவிடுதியில், 5.1 மி. மீ., மழையும், மயிலம்பட்டியில் 13 மி. மீ., மழையும் பதிவானது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.