அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கொரோனா சிறப்பு நிவாரணப் பொருட்கள் வரும் 3 ஜூன் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ரேசன் கடைகளில் விநியோகிக்கப்பட உள்ளது. மொத்தம் 400 ரூபாய் மதிப்பிலான பதினைந்து பொருட்களை அரசு நிவாரணமாகத் தருகிறது. கோதுமை மாவு , உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்து, புளி, கடலைப்பருப்பு, டீத்தூள், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், குளியல் சோப், துணி சோப் மற்றும் துணிப்பை ஆகியவை இதில் அடங்கும்.




Also Read:’முழு ஊரடங்கை மிகக் கடுமையாக்க முடிவு!’ - முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை