கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாடாளுமன்றம்- விவாத நேரம்:


மனித கழிவுகளை மனிதனே சுத்தம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குக்குப் பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் தூறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், ”2018-2022 காலக்கட்டத்தில் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 308 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், தமிழ்நாட்டில் மட்டும் 52 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.