வேலூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (26). இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள்  இருவம் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பெற்றோர் சம்மதத்துடன் முடிவு செய்துள்ளனர். 




இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இருவரும் அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ஆரோவில் கடற்கரைக்கு சென்று இரவு விடுதியில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 1:30 மணியளவில் ரமேஷூக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் விடுதிக்கு திரும்பினார்.


இதனையடுத்து காலை 4.30 மணியளவில் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்ட ரமேஷ் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படடார். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.