கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 2023ஆம் ஆண்டிற்கான வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்வது தொடர்பாக வரைவு, வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்கள்.







ஏற்கெனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்திடும் பொருட்டு உள்ள 1,045 வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. மேலும், வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வழங்கப்படுகிறது. 





மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வழங்கப்படுகிறது. சட்டமன்றத் தொகுதியின் பெயர் ஏற்கெனவே உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை புதியதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை வரைவுவாக்குச் சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 134-அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், 253-வாக்குச்சாவாடிகளும், 135-கரூர் சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச் சாவாடிகளும், 136-கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 258 வாக்குச்சாவாடிகளும், 137- குளித்தலை  சட்டமன்ற தொகுதியில் 268, 258 வாக்குச்சாவாடிகளும், என 1,045 வாக்குச்சாவாடிமையங்கள் உள்ளன. இதில் 135, கரூர் சட்டமன்ற தொகுதியில் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையத்தை பிரித்து கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. கூடுதலாக உள்ள  ஒரு வாக்குச்சாவடி மையத்தையும் சேர்த்து மொத்தம் 1,045கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்திட ஏதுவாக சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால், கீழ்காணும் காரணிகளின் அடிப்படையில் மாறுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வாக்குச்சாவடி மையங்களின் விபரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.







வாக்குச்சாவடி மையங்களின் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியவை (NomenClature change) வாக்குச்சாவடி மையங்களின் இடமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டியவை(Change of location) வாக்குச்சாவடி மையங்களை புதிதாக உருவாக்குதல் / இணைத்தல் / மாறுதல் (Creation/ Merger/ Modification) செய்திட இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும், வாக்காளர்களின் இருப்பிடத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும் பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள்உருவாக்கப்பட வேண்டும். 


இந்நிகழ்வில்  135 கரூர் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 252 (காளியப்பகவுண்டனூர்)-ல் 1,519 வாக்காளர்கள் உள்ளதால் மேற்படி பாகம் எண் 252- னை இரண்டாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 06.09.2022-க்குள் தங்களது முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம்  எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடி மறுவரையறை செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் எதிர்வரும் 07.09.2022 முதல் 14.09.2022 வரைக்குட்பட்ட ஒரு தேதியில்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்த தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.




மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது  தொடர்பாக  எதிர்வரும் 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாமினை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன் பெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சைபுதின், வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா(கரூர்), புஷ்பாதேவி(குளித்தலை) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர்  கலந்து கொண்டனர்.