தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றுவது கட்டாயமல்ல என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.


தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று விவாதத்திற்கு வருகிறது.


இந்நிலையில் சில ஐ டி நிறுவனங்கள் 12 மணி நேர வேலைக்கு சம்மதம் தெரிவித்ததால் இந்த சட்ட மசோதா கொண்டு வருவதாகவும், மற்றப்படி தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நேரம் 8 மணி நேரம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் அமைச்சர் கணேசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு விளக்கம் அளித்துள்ளார்.