பாமக நிறுவனர் ராமதாசுக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்






பயிற்சி வகுப்புகளும் ஒத்திவைப்பு:


மேலும் தெரிவித்துள்ள அவர், கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பதால், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பயிலரங்கில் நடத்தப்பட்டு வந்த ஆய்வுக் கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அவற்றுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.






முகக் கவசம்:


கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவு, அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும் எனவும், தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண