நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களுக்கும் குறைவான காலமே இருப்பதால் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இளைஞர் பாசறை, மகளிரணி பாசறை மற்றும் பூத் கமிட்ட் உறுப்பினர்கள் மேற்கொள்ளவேண்டிய களப்பணிகள் குறித்து அலோசனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. வரும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக ஏற்கனவே தெரிவித்துள்ளது. 


இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், வரும் வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பூத் கமிட்டி பணிகளை முடிக்காத 22 மாவட்டங்களில் பூத் கமிட்டி பணிகளை விரைவில் முடிக்க அறிவுருத்தியுள்ளார். அதேபோல் டிசம்பர் மாதம் முதல் தேர்தல் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.