அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி செய்யும் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. 


தமிழகத்தில் மலைகள் அதிகமுள்ள தமிழ்நாட்டில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 20 கல்வி ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் மலைக்கு கீழ் உள்ள சமவெளிப் பகுதிகளில் மட்டுமே பணி செய்ய விரும்புகின்றனர். ஆனால் மலைக்கு மேல் உள்ள பகுதியில் பணியாற்ற விரும்பாததால் அங்குள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. 




இதனை களைய மலையில் மேல் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி மலை சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை திருத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார். அதில் மலைவாழ் இடங்களில் தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ்  செயல்படும் மலைப்பகுதி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் அந்தந்த மலைப் பகுதியில் பணிபுரிய தயங்குகின்றனர்.



இவர்கள் மலைப்பகுதி பள்ளிகளில் குறைந்தது ஓராண்டாவது பணிபுரிய வேண்டும். சுழற்சி முறையில் அந்த பள்ளி ஆசிரியர்கள் பணிக்காலம் முழுமை பெறும் வரை பணியாற்றுவார்கள். பதவி உயர்வுக்கான பணியிடங்களில் காலியிடங்களை முதலில் மலைப் பகுதிக்கு வழங்க முன்னுரிமை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண