தமிழக அரசின் கட்டிடக்கலை மற்றும் பொதுப்பணித்துறை அறிவிப்பின்படி, சேலம், திருநெல்வேலி, கடலூர் ஆகிய நகரங்களில் தலா ஒரு “மெகா நூலகம் மற்றும் அறிவு மையம்” அமைக்கப்பட உள்ளது.

Continues below advertisement

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்ட “மெகா நூலகம் மற்றும் அறிவு மையம்” (Mega Library cum Knowledge Centre) திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் மூன்று முக்கிய நகரங்களில் இதற்கான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட இந்த புதிய கட்டிடங்கள், உலகத் தரத்தில் நூலக சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளன.

Continues below advertisement

  • கடலூர்: 75,000 சதுரஅடி பரப்பளவில் (தரைத்தளம் + 4 தளங்கள்) உருவாகவுள்ள நூலகத்திற்கான மதிப்பீட்டு தொகை ரூ. 80 கோடி.
  • திருநெல்வேலி: 70,000 சதுரஅடி பரப்பளவில் (தரைத்தளம் + 4 தளங்கள்) அமைக்கப்படும் இத்திட்டத்தின் செலவு ரூ. 70 கோடி.
  • சேலம்: 75,000 சதுரஅடி பரப்பளவில் (தரைத்தளம் + 6 தளங்கள்) அமைக்கப்படவுள்ள இந்த நூலகத்துக்கான மதிப்பீட்டுக் கட்டணம் ரூ. 74 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலக மையங்கள் சாதாரண புத்தக வாசிப்பு இடங்களாக மட்டும் இல்லாமல், அறிவு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த மையங்களாக உருவாக்கப்படவுள்ளன. இங்கு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு ஊழியர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பலரும் பயன்பெறும் வகயில் ஏற்பாடுகள் செய்யப்பட்டவுள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் டிஜிட்டல் நூலகம், மல்டிமீடியா லேப், இ-லெர்னிங் மையம், சமூக அரங்கம், குழந்தைகள் அறிவு மையம், காலமுறை கண்காட்சிகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படவுள்ளன.  இதற்கு முன் சென்னை அண்ணா நூலகத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட “மெகா அறிவு மைய” திட்டம் பெரும் வெற்றியை பெற்றது.  அதனைத் தொடர்ந்து மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களிலும் இதே மாதிரி நூலகங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது இம்மூன்று புதிய நகரங்களும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு வழிகாட்டல், ஆராய்ச்சி வாய்ப்புகள் போன்றவற்றையும் இங்கு ஒருங்கிணைக்க முடியும்.  இந்த நூலகங்கள் நகர வளர்ச்சியின் மையமாக மட்டுமல்லாமல், அறிவு பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பாகவும் விளங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, “அறிவு தமிழகம்” என்ற நோக்குடன் கல்வி, தகவல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொடர்ந்து புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இம்மெகா நூலகங்கள் அறிவு பரிமாற்றத்திற்கான மையக் கோபுரங்களாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம், திருநெல்வேலி, கடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதியவர்கள், ஆராய்ச்சியாளர்கள், நூல் ஆர்வலர்கள் ஆகியோருக்கு இது பெரும் நன்மையாக அமையும். குறிப்பாக கிராமப்புற மற்றும் சிற்றூர மக்களும் இத்திட்டத்தின் மூலம் உயர் தரமான கல்வி வளங்களை எளிதில் அணுக முடியும் என கூறப்படுகிறது.