சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கு மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கு தொடர்பால இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 


மதுரையில் NIA அதிகாரிகள் சோதனை: 


மதுரையில் உள்ள ஹாஜிமார்தெரு பகுதியில் உள்ள நபரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியில் அலி ஜிகாத் என்பவரது வீட்டில் சோதனை நடத்துவதற்காக NIA அதிகாரிகள் வருகை புரிந்தனர். இவர் வக்தே- இஸ்லாம் என்ற அமைப்பில் இருந்துவந்த நிலையில் கோவையில் கோவில் அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. 


விருத்தாசலத்தில் என்.ஐ.ஏ., சோதனை: 


விருத்தாசலம் அருகே மங்கலம் பேட்டையில் சுலைமான் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


கோவையில் என்.ஐ.ஏ., சோதனை:


கோவையில் உக்கடம் அல் அமீன் காலனி உள்பட, 12 இடங்களில் அதிகாலை முதல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


நெல்லை: 


நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ள பக்ருதீன்(35) வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


திருச்சி:  


அஷ்ரப் அலி என்பவர் சிங்காரத் தோப்பில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார் , இவரது வீடு பீமநகர் கூனிபஜார், பகுதியில் அமைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களில் NIA சோதனை நடத்தி வருகின்றனர்.