Minister Udhayanidhi Stalin: தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன்.. விமர்சனங்களுக்கு பதிலளிப்பேன் - அமைச்சர் உதயநிதி

Minister Udhayanidhi Stalin: தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Continues below advertisement

தமிழக அரசின் 35வது புதிய அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பதவியை,  பதவியாக கருதாமல் பொறுப்பு உணர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.  

ஆனால் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் உதயநிதி அமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ளார். அதன்படி ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

 

இந்நிகழ்வில் ‘உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என சொல்லும் போது அரங்கத்தில் ஆரவாரம் எழுந்தது. பின்னர் ஆளுநர் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பூங்கொத்து வாழ்த்துப் பெற்ற அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள்,  திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுக்கும் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பதவியை,  பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என தெரிவித்தார். இதனிடையே புதிய அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என்றும், விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 

 

Continues below advertisement