சென்னையில் 3 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சேவையை விரைவுபடுத்த இந்த முடிவு மேற்கொள்ள பட்டதாக கூறப்படுகிறது. 


இதையடுத்து, வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை ஒவ்வொரு 3 நிமிடத்திற்கு ரயில் இயக்கவும், சில நாட்களாக சோதனை ஓட்டம் நடக்கும் நிலையில் விரைவில் முழுமையாக அமல்படுத்தவும் மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.