மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடியில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் ரூபாய் 89.54 லட்சம் செலவில் மிக விரைவில் நினைவக கட்டட புனரமைப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தில்லையாடி வள்ளியம்மை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் தில்லையாடி அருணாசலக்கவிராயர், தியாகி வள்ளியம்மை வாழ்க்கை வரலாறு புத்தகங்களை பரிசாக வழங்கினர். 




தொடர்ந்து தில்லையாடி  வள்ளியம்மை  வாழ்க்கை வரலாற்றை கேட்டு தெரிந்து கொண்டார். அதனை அடுத்து  செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், செய்தித்துறை பராமரிப்பில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் கலைஞரால் திறக்கப்பட்டு 1971 -இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு இருந்த ஆபத்தை துடைக்கின்ற வகையில் உயிர் தியாகம் செய்த வள்ளியம்மையின் நினைவு போற்றும் வகையில் தில்லையாடியில் கட்டப்பட்ட மணிமண்டபம் பல ஆண்டுகளாகியுள்ளதால் பராமரிப்பு பணி செய்யப்பட உள்ளது. இந்த பணி ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் தில்லையாடி நினைவு மண்டபம் புதுப்பிக்கப்பட உள்ளது.  


Terrorists Killed: ஜம்முவில் 4 பயங்கரவாதிகள்... ஒரே மாதத்தில் 10 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..




தமிழிசை மூவருள் ஒருவரான அருணாசலக்கவிராயர் பிறந்த ஊரான தில்லையாடியில் அவருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். தமிழக அரசு மணிமண்டபம் அமைப்பதில் நாட்டம் செலுத்துவதை விட அதனை மக்களுக்கு பயன்படும் வகையிலான சமுதாய கூடங்கள்,  அரங்கங்கள் அமைப்பது, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாக உள்ளது. அந்த வகையில் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை மக்கள் பயன்பாட்டுக்கு எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்து சீரமைப்பு பணிகளுக்கு பின்னர்  ஆலோசனை மேற்கொண்டு உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.