ஆளுநர் ஆர்.என்.ரவியை அகற்றுங்கள்: மதிமுக கையில் எடுக்கும் கையெழுத்து போராட்டம்!

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்றக் கோரும் கையெழுத்து இயக்கத்தை மறுமலர்ச்சி தி.மு.க. 20.06.2023 அன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடத்துகிறது.

Continues below advertisement

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.இரவியை அகற்றக் கோரி மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இதுகுறித்து அக்கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 29 ஆவது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்றக் கோரும் கையெழுத்து இயக்கத்தை மறுமலர்ச்சி தி.மு.க. 20.06.2023 அன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடத்துகிறது.

தலைநகர் சென்னையில், தலைமைக் கழகம் அமைந்துள்ள தாயகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.

கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் கோவையிலும், கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் அவர்கள் கடலூரிலும், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் தென்சென்னையிலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் காஞ்சிபுரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.கு.மணி அவர்கள் விழுப்புரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அவர்கள் திருநெல்வேலியிலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்கள் குடந்தையிலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா சேக்முகமது அவர்கள் திருச்சியிலும் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.

கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, மக்கள் இயக்கமாக நடத்துகிறார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola