கரூர்: புகளூர் காகித ஆலையில் வேலைக்கு சென்றவர் நெஞ்சு வலியால் மரணம் - நிர்வாகம் அலட்சியப் போக்கு

4 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது மயங்கி கீழே விழுந்து விட்டார். காகித ஆலை முதலுதவி மையத்தில் பரிசோதித்த பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் அவர் அனுப்பப்பட்டுள்ளார்.

Continues below advertisement

கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலையில் வேலைக்குச் சென்றவர் நெஞ்சு வலியால் மரணம் அடைந்தார். காகித ஆலை மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்கவில்லை என கூறி தொழிலாளர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement



கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலையில் ஆயிரத்து மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கிரெயன் ஆப்பரேட்டராக அருண் சுதன் வயது 32 என்பவர் திருவையாறு சார்ந்தவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், சஹானா என்கின்ற 6 வயது பெண் குழந்தையும் உள்ளது. நேற்று இரவு பணிக்கு உள்ளே வேலைக்கு சென்றவர் 11 மணி அளவில் நெஞ்சுவலி என ஆலையில் உள்ள முதலுதவி மையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்.


அவரை பரிசோதித்த மருத்துவர் வாய்வு தொல்லையாக இருக்கும் என்று கூறி சாதாரண மாத்திரைகளை கொடுத்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகும் தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி இருந்திருக்கின்றது. காலை 4 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது மயங்கி கீழே விழுந்து விட்டார்.


காகித ஆலை முதலுதவி மையத்தில் பரிசோதித்த பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் அவர் அனுப்பப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியதால் பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. 


மேலும், இரவு 11 மணிக்கு உடல் சரியில்லை என முதல் உதவி மையத்திற்கு சென்ற பொழுது முறையாக பரிசோதித்து பார்த்திருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்றும் அவருடைய இறப்பிற்கு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே காரணம் என கூறி அவரது உறவுனர்கள் மற்றும் தொழிலாளர்கள். மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola