மகாகவி பாரதியாரின் பேத்தி 94 வயதான லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணியளவில் காலமானார். 


மகாகவி பாரதியார் போன்று இவரும் தமிழில் மிகவும் புலமை பெற்றவர். கவிதை எழுதுவதில் சிறந்தவரான இவர் பல நூல்கள் எழுதி பாரதியின் புகழுக்கு பெருமை சேர்த்தவர். 






 மறைந்த லலிதா பாரதி தன் கைகளால் கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கி கௌரவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.