வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் பண்டிகை காலங்களில் சொந்து ஊர்களுக்கு செல்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இதனால் பண்டிகை காலங்களில் பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  கிறிஸ்துமஸ் மட்டும்மில்லாமல், ஆங்கில புத்தாண்டு,  24ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்,  ஆம்னி பேருந்தில் கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 25-ஆம் தேதி சொந்த ஊர்களுக்ககு செல்லும் பயணிகளை குறிவைத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 1-ஆம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கமாக இருப்பதை விட 2 மடங்கு உயர்ந்துள்ளது.


கட்டண உயர்வு


குறிப்பாக இன்று பார்க்கும்போது, பஸ்களின் கட்டணம் வழக்கமான நாளைவிட 2 மடங்கு அதிகமாக இருப்பதை காண முடிகிறது. உதாரணமாக, திருநெல்வேலிருந்து இருந்து சென்னைக்கு வழக்கமான நாட்களில் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன வசதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் சுமார் ரூ.2,400 முதல் 2,700 வரை கட்டணம், ஆனால் ஐனவரி 1-ஆம் தேதி ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.


இதே போல்,   மதுரையிலிருந்து சென்னை திரும்புவதற்கு ரூ.700 முதல் 1,000 வழக்கமான கட்டணம், ஐனவரி 1-ஆம் தேதி ரூ.2,900 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு சுமார் ரூ.1,300 வழக்கமான கட்டணம், ஜனவரி 1 முதல் ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.


கட்டணம் குறைவாக இருக்கும் பேருந்துகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை ஆனாதால் மக்கள் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்கின்றனர். இதனால், பண்டிகை காலங்களில் விமான டிக்கெட் கட்டணத்துக்கு இணையான வகையில் ஆம்னி  பேருந்து கட்டணம் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பயணிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகுகின்றனர்.


அபராதம்


இதனை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதனால், அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 92, 500 அபராதம் விதிக்கப்பட்டது. 


தொடர்ந்து புகார் எழுந்ததையடுத்து கோயம்பேடு,போரூர் பகுதிகளில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 49 ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, 49 பேருந்துகளுக்கும் ரூ.92, 500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும், புகாரளித்த 9 பயணிகள் செலுத்திய அதிக கட்டணம் ரூ.9,200 பணமும் அவர்களுக்கே திரும்பப் தரப்பட்டது. 




மேலும் படிக்க


“நலமாக இருக்கிறேன்; எனக்கு எந்த காயமும் இல்லை; காருக்குதான்...” - ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி!