கும்பகோணம் அருகே புதுமணத் தம்பதியினரை பெண்ணின் சகோதரன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுமணத் தம்பதியினரை வெட்டிக்கொலை செய்த சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். 


கும்பகோணம் அருகே சோழபுரத்தில் வசித்து வந்தவர் சரண்யா. இவர் சென்னையை சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், சரண்யாவிற்கு இவரது உறவினருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தநிலையில், கடந்த வாரம் சரண்யா சென்னையில் உள்ள தனது காதலரான மோகனை திருமணம் செய்துகொண்டார். 


இதையடுத்து, சரண்யாவின் அண்ணன் சக்திவேல், உனது நகை அடமானத்தில் உள்ளது. நீ வந்தால்தான் அதை மீட்க முடியும் என்று அழைத்துள்ளார்.  கடந்த வாரம் திருமணம் செய்துகொண்ட இந்த புதுமண தம்பதியினர் இன்று சரண்யாவின் சொந்த ஊரான கும்பகோணத்திற்கு வந்துள்ளார். 


தொடர்ந்து, சரண்யா வங்கியில் நகையை மீட்க கையெழுத்து போட்டுவிட்டு சென்னை திரும்ப இருந்தார். அப்பொழுது அந்த பெண்ணின் சகோதரர் சக்திவேல் மற்றும் பெண்ணை திருமணம் செய்ய இருந்த ரஞ்சித் என்பவர் இணைந்து சரண்யா மற்றும் மோகனை கம்பியால் அடித்தும், அரிவாளை கொண்டு வெட்டியும் கொலை செய்துள்ளனர். 


இதையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வெட்டிக்கொலை செய்த சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள இருவரையும் தேடி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண