கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி பாலியல் தொல்லை தந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:


"கிருஷ்ணகிரி மாெட்டம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டுெரும் தனியார் பள்ளியில், NCC திட்டத்திற்கு மாணவிகளை தயார்ப்படுத்துவதற்காக முகாம் பள்ளி நிர்வாககத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்றுநர்கள் கலந்துசகாண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காெல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட NCC பயிற்றுநர்கள் ஆறு நபரில், ஐந்து பேரும், இந்த சம்பவத்தை காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


ஐ.பி.எஸ். தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு:


மேலும், வழக்கின் முக்கிய எதிரி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட இரு நபர்களும் ணகது செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய போலியான NCC பயிற்றுநர்கள் இதேபோன்று, மேலும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளை
மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த சம்பவங்களைப் ப்றறி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகள் எடுக்கும் வகையில், திருமதி பவானீஸ்வரி ஐ.பி.எஸ்., தலைமையில் சிறப்பு 
புலனாய்வுக்குழு அமைத்திட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 


ஐ.ஏ.எஸ்.தலைமையில் பல்நோக்கு குழு:


இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்தாலோசிதது அவர்களின்
நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும்,
உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஐ.ஏ.எஸ். தலைமையில்  ஒரு
பல்நோக்கு குழு (Multi Disciplinary Team - MDT) அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார். 


15 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு:


ஜானி டாம் வரக்கீஸ் ஐ.ஏ.எஸ்., பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா மற்றும் சத்யராஜ் ஆகியோரும், காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள பாதுகாப்பு ஆர்வலர் வித்யா உறுப்பினர்களாக இருப்பார்கள். மேற்கூறிய சம்பவம் குறித்து விசாரணையை துரிதமாக மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைளையும் முடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனையைப் பெற்றுத்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.