பா.ஜ.க விலிருந்து மேலும் ஒரு மாநில செயலாளர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அண்ணாமலை பாகுபாடுடன் செயல்படுவதாகவும் கூறி பாஜக மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு ராஜினாமா செய்துள்ளார்.


அது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ”மதிப்பும் மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும், மரியாதைக்குரிய கேசவ விநாயகம் அவர்களும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும், கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது. அதற்கும் மேல் நேர்மாறாக இங்கே அவர்களது சுய லாபத்திற்காகவும், மதம் சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்குள் பலவிதமான சச்சரவுகளையும் மேலும் எங்களிடமிருந்து தொண்டர்கள் நிர்வாகிகளிடம் இருந்தும் பணம் வசூலிக்க சொல்லியும் பணத்தைப் பெற்றுக் கொண்டும் பல விதமான அரசியல்களை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.


எங்களை நீங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக வற்புறுத்தி சில விஷயங்களையும் கோரிக்கைகளையும் செய்ய சொல்வது, மேலும் ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை. இந்தக் கட்சி என்னையும் என் குடும்பத்தாரையும் பதம் பார்த்து விட்டனர். மேலும் இந்த பொருளாதார பிரிவின் பிரச்சனைகளையும் நேரடியாக உங்களிடம் சொல்லியும் இதுவரை நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.


இதற்கு முழு காரணமாக இருக்கும் பொருளாதார பிரிவின் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாவட்ட தலைவர் மகா, சுசீந்திரன், நரசிங்க பெருமாள் இவர்களை எல்லாரையும் வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய நீங்கள் பொறுப்பாக செயல்படவில்லை. பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்பது தான்  உண்மை. இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன, இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே ஆபத்து வரும். இந்த கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.  


Governor Ravi On Tamil: ’இந்தியை விட தமிழ் பழமையானது, ஆனால்..’ ஆளுநர் ரவி என்ன பேசினார்?


Governor RN Ravi: தென்னிந்தியாவில் இருந்து ஐஎஸ் அமைப்பில் சேருவோரில் 90% பேர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்: ஆளுநர் ரவி பரபரப்புப் பேச்சு