கரூரில் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் மூன்று பேருக்கு பணியிட மாறுதல் வழங்கிய முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 


 




கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்ற நான்கு மாதத்திற்குள் பல்வேறு பணியிட மாறுதல்களை விதிகளுக்கு புறம்பாக செய்து வருகிறார். பணியாளர்களுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக எங்கள் சங்கத்தின் சார்பில் நேரடியாக அவரை சந்தித்து முறையீடு செய்தோம். பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கடந்த வாரம் வாக்குறுதி அளித்த முதன்மை கல்வி அலுவலர், மூன்று பணியாளர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


 


 




 


பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி இலவச கலந்தாய்வுகள் நடத்தி, ஊழியர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிட மாறுதல்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், கரூர் முதன்மை கல்வி அலுவலர் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என பாகுபாடு காட்டி விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி  வருகிறார்.


 




 


எனவே, விதிகளுக்கு புறம்பாக மூன்று ஊழியர்களுக்கு  வழங்கப்பட்டுள்ள ஆணையை ரத்து செய்வதோடு, ஏற்கனவே வழங்கிய உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் தங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.