தவெக அரசியல் களத்தில் மிகப்பெரிய கரும்புள்ளியாக இருப்பது கரூர் விவகாரம். கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த கூட்டத்தை ஜனநாயகன் படத்திற்காக பயன்படுத்திக் கொண்டதாக தவெக மீது பலரும் குற்றச்சாட்டினர்.

Continues below advertisement

இந்த விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் படத்தின் இயக்குனர் எச்.வினோத் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகள் எழுப்பினார். தவெக ஐடி விங் இன்று தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

எச்.வினோத் கேள்வி:

பதில் சொல்லுங்கள் பிராடுகளே!  கேள்வி கேட்டிருக்கிறார் ஹெச்.வினோத்! செப்டம்பர் 27, 2025 கரூர் பிரச்சாரத்தை ஜனநாயகன் ஷூட்டிங்குக்காக பயன்படுத்தினார்கள் என்று பச்சைப்பொய் சொன்னவர்களை கேள்வி கேட்டிருக்கிறார் ஹெச்.வினோத்.  

Continues below advertisement

பெப்சி அமைப்புக்குத் தெரியாமல் ஒரு அங்குலச் சுருள் கூட படமாக்க முடியாது. பிறகு எப்படி கரூரில் ஷூட்டிங் என கப்சா விட்டீர்கள்? ஒருமனிதன் எங்கே இருந்தான் என கண்டுபிடிக்க எவ்வளவோ வழி இருக்கிறது. பிறகு எப்படி நான் பிரச்சார வாகனத்துக்குள் இருந்தேன் என கூசாமல் சொன்னீர்கள்?  

பொய்க்கீரர்கள் எங்கே?

பொய்களை கண்டிபிடிப்பதுதான் புலனாய்வு ஊடகவியல் (Investigative Journalism). பத்திரிகையாளர்கள் பெயரை களங்கம் படுத்தும் விதமாய் பல போலி பத்திரிக்கையாளர்கள் பொய்களை பரப்பியது என்ன வகையான ஊடகவியல்? ஒரு தமிழ்க்கலைஞன் தன் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழிகுறித்து கேள்விகேட்டிருக்கிறார். 

மீசைவழிய பொய்சொன்ன பொய்க்கீரர்கள் எங்கே?  ஈரானுக்கும், எத்தியோப்பியாவுக்கும் பொங்கிவழியும் போலி போராளிகள் எங்கே?  ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஒத்தூதி விட்டு மீண்டும் பொந்துக்குள் ஒளிந்து கொள்ளும் வாடகை வாய்கள் எங்கே?  

பதில் சொல்லுங்கள் பிராடுகளே!

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

எச்.வினோத்தின் கேள்விக்கு அப்போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்த யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனநாயகன் படம் கடந்த 23ம் தேதி வெளியானது. எச்.வினோத் இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், மமைதா பைஜு என பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருப்பார்கள்.