மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு 8,100 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 9,714 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் டெல்டா பாசன பகுதியில் குருவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 39 கனஅடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 260 கன அடியில் 220 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை நீர்மட்டம் 64.08 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நன்காட்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடிஉயரம் கொண்ட நங்கஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 28.67 அடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம் கா பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 11.48 அடியாக இருந்ததால் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்.
கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அனைப்பாளையத்தில் 20 மில்லி மீட்டர் தோகை மலையில் 6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்