கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 52 ஆயிரம் கன அடியாக உயர்வு

டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 51 ஆயிரத்து, 444 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு,  30 ஆயிரத்து, 978 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 52 ஆயிரத்து, 634 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 51 ஆயிரத்து, 444 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

 


 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனை எடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. கதவணையில் இருந்து பிரியும் கட்டளை மேட்டு வாய்க்காலில் 200 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 300 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மாயனூர் கதவணையில் முக்கால் டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 420 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 350 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 522 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 77.17 அடியாக இருந்தது.


திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 32.81 கனஅடியாக இருந்தது.



கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 17.38 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், வினாடிக்கு 52 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் தோகை மலையில் மட்டும் 1.2 மி.மீ., மழை பெய்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola