காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு,  12 ஆயிரத்து, 800 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 13 ஆயிரத்து, 584 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 12 ஆயிரத்து, 464 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,120 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.




திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 133 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 594 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 117 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கனஅடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 79.37 அடியாக இருந்தது.




திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 32.79 கனஅடியாக இருந்தது.





கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 18.99 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், வினாடிக்கு 94 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.




மழை நிலவரம்


கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரவு குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. தெற்கு வங்க கடல் பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலகுவதால் நாளை வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே பானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7:30 மணி முதல் கரூர் டவுன், வெள்ளியணை, வாங்கல், வேலாயுதம்பாளையம், பசுபதிபாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன், சிறிது நேரம் விட்டுவிட்டு மழை பெய்தது.


கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் கரூர் 31.4 மி.மீ, அரவக்குறிச்சி 24.0 மி.மீ, அணைப்பாளையம் 40.0 மி.மீ, க.பரமத்தி 47.4 மி.மீ, குளித்தலை 30.0 மி.மீ, தோகைமலை 3.0 மி.மீ, கே.ஆர்.புரம் 61.2 மி.மீ, மாயனூர் 55.0மி.மீ, பஞ்சப்பட்டி 27.0 மி.மீ, கடவூர் 4.0 மி.மீ, பாலவிடுதி 11.4 மி.மீ, மயிலம்பட்டி 20.0 மி.மீ ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மழை அளவு சராசரியாக 29.33 மி.மீ.