மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் 12 பயனாளிகளுக்கு ரூ.2.32 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.




கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.2,31,549 அரசு நலத்திட்டஉதவிகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிக் கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டைகோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 394 மனுக்கள் பெறப்பட்டது. 


இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 71 மனுக்கள் பெறப்பட்டது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு, பிற மனுக்கள் மீதும் ஒரு வாரகாலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.
 என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 6 நபருக்கு தலா ரூ.4999 மதிப்பீட்டில் ரூ.29,994 மதிப்பீட்டில் கதொலி கருவிகளையும், 1 நபர்க்கு ரூ.540 மதிப்பீட்டில் ஊன்றுகோல்களையும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 மதிப்பீட்டில் எல்போ ஊன்றுகோல்களையும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,435 மதிப்பீட்டில் கைக்கடிகாரம் மற்றும் கறுப்பு கண்ணாடியும், முன்னோடி வங்கி சார்பில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.1,00,000, வீதம் ரூ.2,00,000, மதிப்பீட்டில்கறவை மாட்டு கடனுதவிகளுக்கான ஆணைகளையும், 1 நபருக்கு விரிவான காப்பீட்டுதிட்டத்தில் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் என மொத்தம் 12 மாற்றுத்திறனாளி மற்றும் பயனாளிகளுக்கு ரூ.2,31,549 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட மாவட்ட
ஆட்சித்தலைவர் வழங்கினார்.




தொடர்ந்து நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் விண்ணப்பம் மனு அளித்துள்ளார். அதனடிப்படையில் தோரணக்கல்பட்டியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.8.68 லட்சம் மதிப்புடைய வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார். அதற்குரிய வைப்புத்தொகையினை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1.18 இலட்சம் வழங்கினார்.


இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, தனித் துணைஆட்சியர்(ச.பா.தி) சைபுதீன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


முன்னாள் படை வீரர்களுக்கு தொழிற்பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:


முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கிறோம் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக கைபேசி பழுது நீக்குதல், கார் மெக்கானிக் ஏசி பாராமரிப்பு,எலக்ட்ரீசியன், பிளமிங் ஓட்டுனர், பயிற்சி மின்சாரத்தால், இயங்கும் பஸ்களை பராமரித்தல், மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல், பழுதுபார்த்தல், மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்த்தல், பராமரித்தல் மற்றும் பேட்டரி, சார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தால் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு கணினி தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொருள் பழுதுபார்த்தல் கையல் அலகுகளை நிபுணர் மற்றும் 100க்கும் மேற்பட்ட பல்வேறு பயிற்சிகள் உள்ளன, 


இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் விவரங்களை திருச்சி மாவட்டம் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.