கரூர் மாவட்டம், தென்னிலை முதல் கூனம்பட்டி கரைத்தோட்டம் வரை உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிலை பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ராஜாவிடம், அரசின் கொள்கை முடிவாக உள்ள திட்டத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதபோது, நீங்கள் ஒருவர் மட்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், வருவாய்த் துறையில் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தலையிடுவதாக பொதுமக்களிடமிருந்து உங்கள் மீது புகார் வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
புகார்களின் பெயரில் தங்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று எச்சரிக்கை விடுத்தார். மாவட்ட ஆட்சியருடனான உரையாடலை ஆடியோவாக பதிவு செய்து விவசாயி ராஜா சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார். செல்போன் உரையாடலை பதிவு செய்வதை தெரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், புகார்களின் பேரில் தங்கள் மீது குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய தனக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஆடியோவை பதிவேற்றுவதால் கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்